திருநங்கை திருமணம் மறுப்பு

திருநங்கைக்கு திருமணம் நடத்த கோயில் நிர்வாகம் மறுப்பு..! பாதியில் நின்ற கல்யாணம்…!

தூத்துக்குடியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம், இவரது மனைவி சுப்புலெட்சுமி. இவர்களது மகன் அருண்குமார். இவர் டிப்ளமா முடித்துள்ளார். இதே மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பேச்சிராமன் – வள்ளி தம்பதியர்.

இவர்களது மகள் ஸ்ரீஜா. இவர் பி.ஏ. படித்துள்ளார். திருநங்கையான ஸ்ரீஜாவுக்கும், அருண்குமாருக்கும் இருவரது பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் நடத்தப்பட்டன.

இவர்களது திருமணம், தூத்துக்குடியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ சங்கரராமேஸ்வரர் திருக்கோயிலில் நடத்துவதாக திட்டமிடப்பட்டது. இதற்காக திருமண பத்திரிகையும் அடித்து, உற்றார் உறவினர்கள் நண்பர்கள் என அனைவருக்கும் வழங்கப்பட்டது.

திருமண நாளான இன்று (31.10.2018) மணமக்கள் அருண்குமார், ஸ்ரீஜா, உறவினர் மற்றும் நண்பர்கள் சகிதமாக இன்று காலை கோயிலுக்கு வந்துள்ளனர். திருமணத்துக்கான ஏற்பாடுகள் நடந்த நிலையில், அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க மாட்டோம் என்று கோயில் நிர்வாகத்தினர் கூறினர்.

இதனால் மணமக்கள் மற்றும் நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இளைஞருக்கும் திருநங்கைக்கும் நடக்கவிருந்த திருமணம், கோயில் நிர்வாகத்தால் தடைப்பட்டதை அடுத்து மணமக்கள் அதிருப்தி தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *