பூட்டிய கோவிலுக்குள் கும்மாளமிட்ட காதல் ஜோடி
மக்கள் சுற்றி வளைத்ததால் சுவர்ஏறி குதித்து தப்பியோட்டம்
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அமராவதி ஆற்றங்கரையில் உள்ள நதி கிருஷ்ணன் கோவில் பூட்டப்பட்டிருந்த நிலையில், காதல் ஜோடி ஒன்று சுவர் ஏறி குதித்து உள்ளே சென்றுள்ளது. வெகுநேரமாக அவர்கள் வெளியே வந்தாததால், மக்கள் பூசாரிக்கு தகவல் தெரிவித்தனர். பூட்டை திறந்து கோவிலுக்கு உள்ளே சென்ற போது அங்கு இளம் காதல் ஜோடி சில்மிசத்தில் ஈடுபட்டு கொண்டிருப்பதை கண்டு சப்தம் போட்டுள்ளார். இதனையடுத்து பொது மக்கள் சிலரும் கோவிலுக்குள் வந்து அவர்கள் இருவரையும் பிடிக்க முயன்றபொழுது, கோவிலின் மதில் சுவரில் ஏறி, வயல் பகுதிக்குள் குதித்து தப்பியோடி உள்ளது.