அழுகிய நிலையில் பத்திரிகையாளரின் உடல்… காவல்துறை தீவிர விசாரணை…
அழுகிய நிலையில் பத்திரிகையாளரின் உடல்… காவல்துறை தீவிர விசாரணை…
சென்னை கே.கே.நகர் பகுதியில் அழுகிய நிலையில் பத்திரிகையாளர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் மோகன் என்பவர் அங்குள்ள வார இதழ் மற்றும் தமிழ் நாளிதழில் முன்பு புகைபடக் கலைஞராக பணிபுரிந்துள்ளார். கடந்த 8 ஆண்டுகளாக இவர் சென்னை கே.கே.நகர் விஜயராகவபுரம் 3வது தெருவில் வசித்து வந்தார். இந்நிலையில், மோகன் குடியிருந்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி பொதுமக்கள் கே.கே.நகர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ஆய்வாளர் பாலமுரளி தலைமையிலான காவல்துறையினர் வீட்டின் கதவை உடைத்து, அழுகிய நிலையில் இருந்த மோகனின் உடலை மீட்டனர்.
பின்னர் உடலை சென்னை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புகைப்படக் கலைஞர் மோகன் மாரடைப்பால் இறந்திருக்கக் கூடும் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
*☦🅾தனி ஒருவன் செய்திகள்*