ஈசா பொறியியல் கல்லூரியின் 7-வது பட்டமளிப்பு விழா
––––––––––––––––––
ஈசா பொறியியல் கல்லூரியின்
7-வது பட்டமளிப்பு விழா
அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முருகேசன் வழங்கினார்
கோவை, மார்ச் 25–
கோவை பாலக்காடு சாலை, நவக்கரையில் அமைந்துள்ள ஈசா பொறியியல் கல்லூரியில், 7வது பட்டமளிப்புவிழா, கல்லூரி வளாகத்தில் உள்ள கலையரங்கில் நடைபெற்றது.
விழாவிற்கு ஈசா பொறியியல் கல்லூரியின் தலைவர் டி.டி. ஈஸ்வரமூர்த்தி தலைமை தாங்கி, பட்டமளிப்புவிழாவை துவக்கி வைத்தார். கல்லூரி தாளாளர் டி.ஈ.சுஜாதா, தலைமை செயல் அலுவலர்கள் டி.ஈ.அஜித்,டி.ஈ.ஆதர்ஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கல்லூரி முதல்வர் ராபர்ட் கென்னடி அனைவரையும் வரவேற்று, கல்லூரி ஆண்டறிக்கையினை வாசித்தார்.
விழாவில் சிறப்பு விருந்தினராக மதுரை அண்ணா பல்கலைக்கழக தொழில் நுட்பக் கல்லூரியின் முன்னாள்துணைவேந்தர் முருகேசன் கலந்து கொண்டு, மாணவ, மாணவியர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.
பட்டங்களை பெற்று கொண்ட மாணவ, மாணவிகளுக்கு கல்லூரி முதல்வர் ராபர்ட் கென்னடி உறுதி மொழியினைவாசித்தார். மாணவர்கள் உறுதி மொழியினை எடுத்து கொண்டனர்.
விழாவில் அண்ணா பல்கலைகழக தரசான்றிதழ் 4மற்றும் 5 இடத்திற்கான பட்டங்களை பி.டெக் பெட்ரோலியத்துறை மாணவர்கள் ரோஹித், அபூபக்கர் ஆகியோரும், அண்ணா பல்கலைகழக தரசான்றிதழ் மேலாண்மை துறைமாணவி இந்துமோல் பெற்று கொண்டார். மேலும் இவர்களுக்கு ரொக்கப்பரிசு தலா ரூ.25 ஆயிரம் வழங்கப்பட்டது.தொடர்ந்து அனைத்து துறைகளிலும் உள்ள 160 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது.
விழாவில் கல்லூரி நிர்வாக அதிகாரி ஸ்ரீகாந்த் மற்றும் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ,மாணவிகளின் பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.