சிங்கம்பட்டி சமஸ்தான மகாராஜா டி.என்.எஸ் முருகதாஸ் தீர்த்தாபதி மகாராஜா அவர்களுக்கு முப்பெரும் விழா

 

 

தாமிரபரணி அதிபர் இந்தியாவின் கடைசி முடிசூட்டிய மன்னர் 1000 ஆண்டுகள் சிறப்புடைய சிங்கம்பட்டி சமஸ்தான மகாராஜா டி.என்.எஸ் முருகதாஸ் தீர்த்தாபதி மகாராஜா அவர்களுக்கு முப்பெரும் விழா நடைப்பெற்றது.

டி.என்.எஸ் முருகதாஸ் தீர்த்தாபதிக்கு மகாராஜா 1934 ஆண்டு மூன்றரை வயதில் முடி சூட்டப்பட்டது. அவர் மன்னராக முடிசூடி 84 நான்கு வருடங்கள் ஆகின்றன. இவரே இந்தியாவின் கடைசி முடிசூட்டிய மன்னர் என்ற பெருமை பெறுகிறார். இவர் அரச வம்சத்தின் 33வது வாரிசு ஆவார்.

இவ்விழாவில் நல்லி குப்புசாமி செட்டியார், நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன், தொழிலதிபர் டி.ஏ.சாமிநாதன், எல்.மணி ஆச்சாரி, எஸ்.எம்.வேல் துரை தேவர், டாப் டிவி பி.ராஜா ஆகியோரும் மேலும் தொழிலதிபர்கள், பிரபலங்கள் , பொதுமக்கள் , உறவினர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *