ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டையில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி பொதுக்கூட்டம்
ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டையில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி பொதுக்கூட்டம் நடைப்பெற்றது
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டையில், அனைத்து ஜமாத் சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பபெறக்கோரி நடைப்பெற்ற பொதுக்கூட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்த சட்டம் நாடாளுமன்றத்தில் தமிழகத்தின் அதிமுக,பாமக கட்சிகளின் ஆதரவோடு நிறைவேறியது
இச்சட்டம் மதச்சார்பின்மையை சீர்குலைக்கும் வகையில் இருப்பதாக இந்தியா முழுவதும் கலவரங்கள்,போராட்டங்கள் நடைப்பெற்று வருகின்றன.
அதன் ஒருபகுதியாக ஓசூரை அடுத்த தேன்கனிக்கோட்டையில் அனைத்து ஜமாத் சார்பில் குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி பேரணி நடைப்பெற்றது
பின்னர் நடைப்பெற்ற பொதுக்கூட்டத்தில் தமிமுன் அன்சாரி மற்றும் திமுகவின் 3 எம்எல்ஏக்கள், விசிகவின் வன்னியரசு ஆகிய அரசியல் கட்சிகள் உட்பட 500க்கும் மேற்ப்பட்டோர் பங்கேற்று மத்திய,மாநில அரசுகளை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்