இலங்கை பிரதமர் ரணில் 5 நாள் அரசு முறைபயணமாக இந்தியா வந்தார்
புதுடில்லி: இலங்கை பிரதமர் ரணில்விக்ரமசிங்கே 5 நாள் அரசு முறை பயணமாக இன்று (25.04.17) விமானம் மூலம் இந்தியா வந்துள்ளார்.
டில்லி வந்தடைந்த ரணில். நாளை (26.04.17) மதியம் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார். அப்போது இந்தியா-இலங்கை இடையே தடையில்லா வர்த்தக ஒப்பந்தம், இருநாட்டு மீனவர் பிரச்னை மற்றும் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகலாம் என வௌியுறவுத்துறை தகவல் தெரிவிக்கின்றன. மேலும் ராஜஸ்தானில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள இருக்கிறார்.