12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி: அடுத்த 24 மணி நேரத்தில் கோவை, ஈரோடு உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வெப்பசலனம் காரணமாக உள்மாவட்டத்தில் மழை பெய்யலாம். கடந்த 24 மணி நேரத்தில் வால்பாறையில் 1 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. வடமாவட்டத்தில் சில இடங்களில் வெயில் அதிகரித்து காணப்படும். இவ்வாறு செய்தியில் கூறியுள்ளது.