பொறியியல் படிப்புக்கு விண்ணப்பம் சமர்ப்பிக்க இன்று கடைசி நாள்: ஜூன் 22-ல் தரவரிசைப் பட்டியல் வெளியீடு
பொறியியல் படிப்புக்கு விண் ணப்பம் சமர்ப்பிக்க இன்று (சனிக்கிழமை) கடைசி நாள் ஆகும். விண்ணப்பித்த மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் ஜூன் 22-ம் தேதி வெளியிடப்படும்.
தமிழகத்தில் 570-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் பிஇ, பிடெக் படிப்புகளில் ஏறத்தாழ 2 லட்சம் இடங்கள் அண்ணா பல்கலைக்கழகத்தின் பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன. பொறியியல் படிப்புக்கான ஆன்லைன் பதிவு மே 1-ம் தேதி தொடங்கி 31-ம் தேதி முடிவடைந்தது. ஒன் றரை லட்சத்துக்கும் மேற்பட் டோர் ஆன்லைனில் விண்ணப் பித்துள்ளனர். பிரின்ட் அவுட் எடுக்கப்பட்ட ஆன்லைன் விண்ணப் பத்துடன் தேவையான ஆவணங் களை இணைத்து அண்ணா பல்கலைக்கழகத்தில் சமர்ப்பிக்க இன்று (சனிக்கிழமை) கடைசி நாள் ஆகும். மாலை 6 மணிக்குள் விண்ணப்பங்கள் சமர்ப்பித்துவிட வேண்டும்.
27 முதல் கலந்தாய்வு
ஏற்கெனவே அண்ணா பல் கலைக்கழகம் அறிவித்தபடி, பொறியியல் படிப்புக்கு விண் ணப்பித்த மாணவர்களுக்கு ஜூன் 20-ம் தேதி ரேண்டம் எண் ஒதுக்கீடு செய்யப்படும். அதைத்தொடர்ந்து, 22-ம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு, 27-ம் தேதி முதல் கலந்தாய்வு தொடங்கும்.