ஆன்லைன் கலந்தாய்வு மூலம் 1,323 ஆசிரியர்களுக்கு இடமாறுதல்

ஆன்லைன் கலந்தாய்வு மூலம் 1,323 பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநர் களுக்கு இடமாறுதல் ஆணை வழங்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வி இயக்குநர் ஆர்.இளங் கோவன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்தி இடமாறுதல் ஆணை வழங்க பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் உத்தர விட்டுள்ளார். அதன்படி அரசு, நகராட்சி, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் (அனைத்துப் பாடங்கள்), உடற்கல்வி இயக்குநர் (கிரேடு-2) ஆகியோருக்கு மே 31, ஜூன் 1 ஆகிய நாட்களில் ஆன்லைனில் வெளிப்படையான கலந்தாய்வு நடத்தப்பட்டது.

இதன்மூலம் 1,323 ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் தாங்கள் விரும்பிய இடத்துக்கு இடமாறுதல் ஆணை பெற்றுள்ளனர்.

இவ்வாறு இளங்கோவன் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *