குட்வில் காம்டிரேட்ஸ் நிறுவனத்துக்கு விருது
குட்வில் காம்டிரேட்ஸ் நிறுவனத்துக்கு ‘2016-17-ம் ஆண்டுக்கான சிறந்த சரக்கு தரகு நிறுவன விருது’ மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்ச் ஆஃப் இந்தியா நிறுவனத்தால் (எம்சிஎக்ஸ்) வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
குட்வில் காம்டிரேட்ஸ் (பழைய பெயர் குட்வில் கமாடிட்டிஸ்) நிறுவனம் 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. நாடு முழுவதும் 70 அலுவலகங்களை அமைத்து 80 ஆயிரம் வாடிக்கை யாளர்களுக்கு வர்த்தகம் மற்றும் நிதி தொடர்பான சேவைகளை வழங்கி வருகிறது. தினமும் சராசரியாக ரூ.1500 கோடி அளவுக்கு இதன் மூலம் வர்த்தகம் நடைபெறுகிறது.
குட்வில் காம்டிரேட்ஸ் நிறுவனம் 2016-17-ம் ஆண்டுக்கான சிறந்த சரக்கு தரகு நிறுவனமாக இந்திய பல்பொருள் பரிமாற்ற நிறுவனத்தால் (எம்சிஎக்ஸ்) அறிவிக்கப்பட்டுள்ளது. குட்வில் காம்டி ரேட்ஸ் நிறுவனத்துக்கு விருது கிடைத் ததை கொண்டாடும் கூட்டம் தி.நகர், தி ரெசிடென்சி ஹோட்டலில் நடைபெற் றது. எம்சிஎக்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த டி.ஜி.செந்தில் வேலன் சிறப்பு விருந் தினராக இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். குட்வில் குழும தலைமை செயல் அதிகாரி ஆர்.பாஸ்கரன், துணைத் தலைவர் சரவணாபவன் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். நாடு முழுவதிலுமிருந்து குட்வில் குழும அதிகாரிகள் இதில் பங்கேற்றனர். சிறப்பாக பணியாற்றிய வர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கப் பட்டது. மும்பையிலிருந்து செயல்படும் எம்சிஎக்ஸ் நிறுவனம் தங்கம் வெள்ளி, இரும்பு அல்லாத உலோகங்கள், எரிசக்தி, விவசாய விளைபொருட்கள் பரிமாற்ற வர்த்தகத்தில் ஈடுபட்டு வரு கிறது. எம்சிஎக்ஸ் நிறுவனம் ‘செபி’ விதி முறைகளின் கீழ் இயங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.