மின்னனு வாக்குப்பதிவு பலப்பரீட்சை: டெல்லி தேர்தல் ஆணையத்தில் துவங்கியது
மின்னனு வாக்குப்பதிவு எந்திரம் மீதான பலப்பரீட்சை புதுடெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்தில் இன்று காலை தொடங்கியது.
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் குளறுபடி செய்யமுடியும், ஒரே கட்சிக்கு வாக்கு பதிவாகும் வகையில் மென்பொருளில் மாற்றம் செய்யமுடியும் என்றெல்லாம் ஆம் ஆத்மி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் குற்றச்சாட்டை முன்வைத்தன.
இதனையடுத்து கடந்த 12-ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தின்போது மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களைக் குறை கூறும் அரசியல் கட்சிகள் அதை நிரூபிக்கலாம் எனத் தேர்தல் ஆணையம் சவால் விடுத்திருந்தது.
பின்னர், மின்னணு வாக்குப்பதிவு எந்திர சவாலை இன்று முதல் எதிர்கொள்ள தயார் என தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது.
அதன்படி, மின்னனு வாக்குப்பதிவு எந்திரம் மீதான பலப்பரீட்சை தலைநகர் புதுடெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்தில் இன்று காலை தொடங்கியது. இதில், தேசியவாத காங்கிரஸ்., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் பங்கேற்றன.
முன்னதாக மின்னனு வாக்குப்பதிவு எந்திரத்தின் மீது பலப்பரீட்சை மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு தடை விதிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உத்தரகாண்ட் ஐகோர்ட் நேற்று தள்ளுபடி செய்தது