லண்டனில் மீண்டும் பயங்கரவாத தாக்குதல்: 6 பலி; பலர் காயம்

பிரிட்டன் தலைநகர் லண்டனில் சனிக்கிழமை இரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 6 பேர் பலியாகினர். பலர் காயமடைந்துள்ளனர்.

இரண்டு வாரங்களுக்கு முன்னதாக லண்டனின் மான்செஸ்டர் நகரில் தற்கொலைப்படை தீவிரவாதி இசை நிகழ்ச்சி ஒன்றில் நடத்திய தாக்குதலில் 22 பேர் பலியாகினர்.

அந்தத் தாக்குதல் சம்பவத்தின் தாக்கத்திலிருந்து இங்கிலாந்து மக்கள் வெளியேவரும் முன்னர் மற்றுமொரு தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.

இத்தாக்குதல் குறித்து, “சனிக்கிழமை இரவு உள்ளூர் நேரப்படி 10 மணியளாவில் லண்டன் மேம்பாலத்தில் தாறுமாறாக ஓடிய வெள்ளை நிற வேன் ஒன்று அப்பகுதியில் சென்று கொண்டிருந்தவர்கள் மீது மோதியது. பின்னர் அந்த வேன் பரோ சந்தைப் பகுதிக்கு செலுத்தப்பட்டுளது. பரோ சந்தைப் பகுதியில் உணவு விடுதிகள், பார்கள் அதிகம் இருப்பதால் அங்கு எப்போதுமே மக்கள் கூட்டம் இருக்கும். பரபரப்பான அந்தப் பகுதியில் வேனை நிறுத்திய மர்ம நபர்கள் அதிலிருந்து இறங்கி அப்பகுதியில் வந்தவர்களை கத்தியால் குத்தியுள்ளனர். இதில் 6 பலியானார். பலர் காயமடைந்துள்ளனர்.

தாக்குதலில் மூன்று முதல் 4 பேர் ஈடுபட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சியங்கள் தெரிவிக்கின்றன” என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் 5-ம் தேதி, லண்டனின் வெஸ்ட்மின்ஸ்டர் மேம்பாலத்தில் கார் ஒன்று தாறுமாறாக ஓடியதில் 5 பேர் கொல்லப்பட்டனர். நாடாளுமன்றத்துக்கு வெளியே பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர் ஒருவர் குத்திக் கொல்லப்பட்டார். தற்போது மீண்டும் அதே பாணியில் வாகனத்தை இயக்கியும் கத்தியால் குத்தியும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *