இந்தியா – பாகிஸ்தான் போட்டியை ஹாயாக கண்டுகளித்த விஜய் மல்லையா

இந்திய வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு தற்போது லண்டனில் தஞ்சமடைந்துள்ள தொழிலதிபர் விஜய் மல்லையா, சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இந்தியா – பாகிஸ்தான் மோதிய போட்டியை மைதானத்திற்கு நேரில் சென்று பார்த்துள்ளார்.
இந்திய வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு தற்போது லண்டனில் தஞ்சமடைந்துள்ள தொழிலதிபர் விஜய் மல்லையா, சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இந்தியா – பாகிஸ்தான் மோதிய போட்டியை மைதானத்திற்கு நேரில் சென்று பார்த்துள்ளார்.
இந்தியாவில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் சுமார் 9000 கோடி ரூபாய் அளவுக்கு கடன் பெற்று விட்டு, தற்போது வங்கிகள் கடனை திரும்ப கேட்டதும் இங்கிலாந்தில் உள்ள லண்டனில் சென்று தஞ்சமடைந்திருக்கும் தொழிலதிவர் விஜய் மல்லையா இந்திய அரசுக்கு தண்ணி காட்டி வருகிறார்.
மல்லையா மீது நடவடிக்கை எடுக்க முயற்சித்து வருவதாக மத்திய அரசு கூறியிருந்தாலும், அவர் அங்கு சொகுசு வாழ்க்கைதான் வாழ்ந்து வருகிறார். அவ்வப்போது பொது நிகழ்ச்சியில் பங்கேற்று பரபரப்பை ஏற்படுத்தும் மல்லையா இன்றும் அவ்வாறு செய்துள்ளார்.
இங்கிலாந்து நாட்டில் தற்போது சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதின. பிர்மிங்கம் நகரில் நடைபெற்று வரும் இப்போட்டியை மல்லையா நேரில் சென்று பார்த்துள்ளார். வெள்ளை கோட் அணிந்து பார்வையாளர்கள் கேலரியில் அவர் அமர்ந்திருக்கும் படம் இணையத்தில் பரவி வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *