உத்தரபிரதேசத்தில் கொள்ளை முயற்சியில் 3 பேர் சுட்டுக்கொலை
உத்தரபிரதேசத்தில் கொள்ளை முயற்சியின் போது ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச தலைநகர் போபாலில் இருந்து 90 கிலோ மீட்டர் தொலைவில் சித்தாப்பூர் என்ற இடம் உள்ளது.
இந்த பகுதியை சேர்ந்த வியாபாரி ஜெய்ஸ்வாஸ் (வயது 60). இவரது மனைவி காமினி. மகன் ரித்திக்
ஜெய்ஸ்வால் நேற்று இரவு 9.30 மணிக்கு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்றார்.
அப்போது வீட்டின் கார்பார்க்கிங் பகுதியில் மறைத்து இருந்த 4 பேர் அவரது கையில் இருந்த சூட்கேசை பறிக்க முயன்றனர். அவரது சத்தம் கேட்டு வீட்டின் உள்ளே இருந்த மனைவியும், மகனும் அவரை காப்பாற்ற முயன்றனர்.
அப்போது கொள்ளையர்கள் தாங்கள் மறைந்து வைத்திருந்த துப்பாக்கியால் 3 பேரையும் சரமாரியாக சுட்டனர். இதில் 3 பேருமே அதே இடத்தில் குண்டு பாய்ந்து பலியானார்கள்.
பக்கத்து வீட்டில் இருந்தவர்கள். இது குறித்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் அந்த இடத்துக்கு விரைந்தனர்.
வியாபாரி, அவரது மனைவி, மகனை கொள்ளையர்கள் சுட்டுக்கொல்வது அங்குள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி இருந்தது. இந்த வீடியோ பதிவை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.
இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.