பல்வேறு விபத்துக்களில் பலியான 9 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதி: முதல்வர் எடப்பாடி உத்தரவு

பல்வேறு விபத்துக்களில் உயிரிழந்த 9 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரண நிதி வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இது சம்பந்தமாக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
‘‘மதுரை மாவட்டம், மதுரை மேற்கு வட்டம், ரவி என்பவரின் மகன் தனேந்திரன் என்பவர் 29.1.2016 அன்று மின் பணியில் ஈடுபட்டிருந்த போது, மின்சாரம் தாக்கியதில், உயிரிழந்தார் என்ற செய்தியையும்;
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், காயல்பட்டணம் தென்பாகம் கீழ லெட்சுமிபுரம் கிராமத்தில் 6.5.2017 அன்று கிணறு தோண்டும் போது, விஷ வாயு தாக்கியதில் ஜெபஸ்தியான் மற்றும் சண்முகசுந்தரம் ஆகிய இருவரும் உயிரிழந்தனர் என்ற செய்தியையும்;
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், புதுகழுவாச்சி கிராமத்தைச் சேர்ந்த கந்தசாமி என்பவரின் மகன் குமரேசன் என்பவர் 10.5.2017 அன்று திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டம், இரும்பேடு கிராமம், மெய்யூர் ரோட்டில் பாலம் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த போது, மண் சரிந்து விழுந்ததில் உயிரிழந்தார் என்ற செய்தியையும்;
வேலூர் மாவட்டம், அரக்கோணம் வட்டம், கீழாந்தூர் கிராமத்தைச் சேர்ந்த ராகவன் என்பவரின் மகன் பூபாலன் என்பவர் 16.5.2017 அன்று தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, வாகனம் மின்மாற்றியில் மோதியதில், உயிரிழந்தார் என்ற செய்தியையும்;
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை வட்டம், திம்மராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த பேருந்து நடத்துனராக பணியாற்றிய தௌலத்ஷா என்பவர் 17.5.2017 அன்று அரசுப் பேருந்திலிருந்திலிருந்து தவறி கீழே விழுந்து உயிரிழந்தார் என்ற செய்தியையும்;
தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டம், விநாயகன்தெரு கிராமத்தைச் சேர்ந்த மருதையன் என்பவரின் மனைவி ராஜேஸ்வரி மற்றும் அவருடைய மகள் ஹாசினி மற்றும் மகன் மாதவன் ஆகிய மூன்று பேரும் 24.5.2017 அன்று கொள்ளிடம் ஆற்றில் குளிக்கச் சென்ற போது, நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற செய்தியையும்;
இந்த துயரச் சம்பவங்களில் உயிரிழந்த தனேந்திரன், செபஸ்தியான், சண்முகசுந்தரம், குமரேசன், பூபாலன், தௌலத்ஷா, ராஜேஸ்வரி, செல்வி ஹாசினி மற்றும் செல்வன் மாதவன் ஆகியோரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயரச் சம்பவங்களில் உயிரிழந்த 9 நபர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்’’.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *