எங்களால் ஆட்சி கவிழாது: ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்புக்கு அமைச்சர் சி.வி.சண்முகம் வரவேற்பு

 

அதிமுக 3 ஆக பிரிந்துள்ள நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எங்களால் எந்தவித பாதிப்பும் வராது என்று ஓ.பன்னீர் செல்வம் கூறியதை அமைச்சர் சி.வி.சண்முகம் வரவேற்றுள்ளார்.
டி.டி.வி. தினகரனை அ.தி.மு.க. அம்மா அணி எம்.எல்.ஏ.க்கள் அடுத்தடுத்து சந்தித்து வருவதால் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பு தொற்றியுள்ளது.

இதற்கிடையே எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எங்களால் எந்தவித பாதிப்பும் வராது என்று ஓ.பன்னீர் செல்வம் நேற்று கூறி இருந்தார்.

இதை அமைச்சர் சி.வி. சண்முகம் வரவேற்றுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

தங்களால் ஆட்சி கவிழாது என்று ஓ.பி.எஸ். அணி கூறி இருப்பதை வரவேற்கிறோம். இணைப்பு குறித்து ஓ.பி.எஸ். அணியுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறோம்.

டி.டி.வி. தினகரனை எம்.எல்.ஏ..க்கள் சந்தித்தது அவர்களது தனிப்பட்ட விருப்பமாகும்.

இவ்வாறு அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *