அதிக நுரை வருவதற்காக பாலில் சோப்பு ஆயில் கலப்படம் செய்தது கண்டுபிடிப்பு: சட்டபூர்வ நடவடிக்கைக்கு மதுரை ஆட்சியர் உத்தரவு
மதுரையில் பொதுமக்கள் பயன் படுத்தும் பாலில் கலப்படம் ஏதும் உள்ளதா என்பதை அறிவதற்காக உணவுப்பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறையின் சார்பில் அரசுப்பேருந்து பணிமனை எதிரில் நேற்று தரப் பரிசோதனை நடந்தது. மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் முன்னிலையில் நடந்த இந்த முகாமில் மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளில் இருந்து 108 பால் மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது.
இதில், உணவு பாதுகாப்பு நிய மன அலுவலர் லட்சுமி நாராய ணன், துணை இயக்குநர் (சுகா தாரப் பணிகள்) அர்ஜுன், நகர்நல அலுவலர் சதீஷ்ராகவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஒரு பால் மாதிரியில் அதிக நுரை வருவதற் காக சோப்பு ஆயில் கலக்கப்பட்டது சோதனையில் தெரியவந்தது. இதை யடுத்து உணவு பாதுகாப்பு அலு வலர் தலைமையில் குழு அமைத்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
இதுகுறித்து உணவு பாது காப்பு அலுவலர் சந்திரமோகன் கூறும்போது, ‘மாதிரிப் பரி சோதனையில் கலப்படம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை சட்டப்பூர்வமாக உறுதி செய்ய கிண்டியில் உள்ள உணவு பகுப் பாய்வு கூடத்துக்கு இந்த பாலை அனுப்ப உள்ளோம். அதிலும் பாலில் கலப்படம் இருப்பது உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட பால் உற்பத்தியாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என் றார்.
மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் கூறும்போது, ‘பொதுமக் களிடையே விழிப்புணர்வை ஏற் படுத்தவே பரிசோதனை முகாம் நடந்தது. வரும் 12-ம் தேதி மேலூ ரிலும், 14-ம் தேதி வாடிப்பட்டியிலும், 16-ம் தேதி திருமங்கலத்திலும் மற் றும் 19-ம் தேதி உசிலம்பட்டி பகுதி களிலும் பால் தரப் பரிசோதனை நடத்தப்படும். இதில் பொதுமக்கள் தாங்கள் பயன்படுத்தும் பாலில் 300 மி.லி அளவுக்கு எடுத்து வந்து கொடுத்து தரப் பரிசோதனை செய்து கொள்ளலாம்.
இதில் பாலில் உள்ள கொழுப்பு, அடர்த்தி, வேதிப்பொருள் கலப்படம் குறித்து பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் தெரிவிக்கப்படும். பாலில் கலப்படம் இருப்பது தெரிய வந்தால் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். 2011-16ல் 340 விற் பனையாளர்களிடம் பால் தரப் பரி சோதனை செய்யப்பட்டு 56 சிவில் வழக்குகளும், 31 குற்றவியல் வழக்குகளும் பதியப்பட்டு ரூ.6,69,000 அபராதமாக விதிக்கப் பட்டுள்ளது.
இந்த ஆண்டு இதுவரை 48 பால் மாதிரிகள் தரப் பரிசோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த பணியில் மாவட்ட உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக அலுவலர்கள் முன்னிலையில் 26 களப்பணியாளர்கள் ஈடு பட்டுள்ளனர்’ என்றார்.