சென்னை ஐஐடி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை ஐஐடி மாணவர்களின் பாதுகாப்பை போலீஸார் உறுதி செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்ய விதிக்கப்பட்ட, தடையை எதிர்த்து சென்னை ஐஐடி மாணவர் சூரஜ் உள்ளிட்ட சிலர் ஐஐடி வளாகத்தில் மாட்டுக்கறி விருந்து நடத்தினர். அப்போது பீகார் மாநிலத் தைச் சேர்ந்த மனீஷ்குமார் சிங் என்ற மாணவர், மாட்டுக்கறி விருந்து நடத்திய சூரஜை கொடூரமாகத் தாக்கியுள்ளார். இதில் கண்ணில் படுகாயமடைந்த சூரஜ் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக கோட்டூர்புரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தாக்குதல் நடத்திய மனீஷ்குமார் உள்ளிட்ட சிலரைத் தேடுகின்றனர்.

இந்நிலையில் ஐஐடி மாணவர் களான அர்ஜூன் ஜெயக்குமார், சாமிநாதன் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தனர். அதில், ‘‘ மாணவர் சூரஜ் தாக்கப்பட்டது தொடர்பாக மாணவர் மனீஷ் மீது உரிய சட்டப் பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்யவில்லை. இந்த வழக்கை கோட்டூர்புரம் போலீஸார் விசாரித் தால் உரிய நியாயம் கிடைக்காது. எனவே மயிலாப்பூர் துணை ஆணையர் அல்லாமல், அப்பத விக்கு குறையாத போலீஸ் அதிகாரி களைக் கொண்டு, இந்த வழக்கை விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்” என்று கோரியிருந்தனர்.

இந்த மனு மீதான விசாரணை நேற்று நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு நடந்தது. அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், ‘‘மாணவர் மனீஷ் எப்போதும் மாற்றுக்கருத்து கொண்டவர்களைத் தாக்குவதை வழக்கமாக வைத்துள்ள தாக பல மாணவர்கள் ஏற்கெனவே ஐஐடி நிர்வாகத்திடம் புகார் கொடுத் துள்ளனர். எனவே, ஐஐடி கல்வி நிறுவனத்தில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் உரிய பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும்” என்று கோரிக்கை வைத்தனர்.

அதையடுத்து நீதிபதி, ஐஐடி-யில் பயிலும் அனைத்து மாணவர்களின் பாதுகாப்பையும் போலீஸார் உறுதி செய்யவேண்டும் என அறிவுறுத்தி, இந்த மனுவுக்கு போலீஸ் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசார ணையை வரும் ஜூன் 12-ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *