16 அணிகள் பங்கேற்கும் அகில இந்திய பால் பேட்மின்டன்: சென்னையில் நாளை தொடக்கம்
செயின்ட் ஜோசப்ஸ் கல்வி நிறுவனங்கள் சார்பில் 9-வது அகில இந்திய பால்பேட்மின்டன் போட்டி சென்னையில் நாளை தொடங்குகிறது. இதில் 16 அணிகள் பங்கேற்கின்றனர்.
செயின்ட் ஜோசப்ஸ் கல்வி நிறுவனங்கள் சார்பில் 9-வது அகில இந்திய பால்பேட்மின்டன் போட்டி சென்னையில் நடத்தப்படுகிறது.
இந்த போட்டி நாளை (10-ந்தேதி) முதல் 12-ந்தேதி வரை சோழிங்கநல்லூரில் உள்ள அந்த கல்லூரி மைதானத்தில் நடக்கிறது.
இதில் தெற்கு ரெயில்வே, ஐ.சி.எப்., மேற்கு ரெயில்வே, தென் மத்திய ரெயில்வே, செயின்ட் ஜோசப்ஸ் என்ஜினீயரிங் கல்லூரி உள்பட 16 அணிகள் பங்கேற்கின்றன.
நாக்அவுட் மற்றும் லீக் முறையில் நடைபெறும் இந்தப் போட்டியின் மொத்த பரிசு தொகை ரூ.1.25 லட்சமாகும். சாம்பியன் பட்டம் பெறும் அணிக்கு ரூ.50 ஆயிரமும், 2-வது இடத்துக்கு ரூ.35 ஆயிரமும், 3-வது இடத்துக்கு ரூ.25 ஆயிரமும், 4-வது இடத்துக்கு ரூ.15 ஆயிரமும் பரிசாக வழங்கப்படும்.