பிரிட்டன் பாராளுமன்ற தேர்தல்: மெஜாரிட்டியை இழந்தது ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி
பிரிட்டன் பாராளுமன்ற தேர்தலில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி, தொழிலாளர் கட்சியைவிட கூடுதல் இடங்களை கைப்பற்றியுள்ள போதும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை.
பிரிட்டன் பாராளுமன்ற தேர்தல் வாக்குப் பதிவு நேற்று முடிவடைந்த நிலையில், இன்று வாக்குகள் எண்ணும் பணிகள் நடைபெற்று வந்தது. இதில், பிரதமர் தெரசா மே தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சிக்கும், ஜெர்மி கார்பின் தலைமையிலான தொழிலாளர் கட்சிக்கும் இடையில் போட்டி நிலவியது.
தொடக்கத்தில் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் தொழிலாளர் கட்சி முன்னிலை பெற்றுது. ஆனால் இறுதியில் கன்சர்வேட்டிவ் கட்சி தொழிலாளர் கட்சியை விட சுமார் 50 இடங்களை வெற்றி பெற்றுள்ளது.
மொத்தமுள்ள 650 இடங்களில் 636 இடங்களுக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் கன்சர்வேட்டிவ் கட்சி 310 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. தொழிலாளர் கட்சி 258 இடங்களை பிடித்துள்ளது. மீதமுள்ள அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றாலும் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு மெஜாரிட்டி கிடைக்காது. மெஜாரிட்டி பெறுவதற்கு 326 தொகுதிகளில் வெற்றி பெற்றாக வேண்டும். இதனால் மற்ற கட்சிகளின் ஆதரவை எதிர்க்கும் நிலைக்கு அக்கட்சி தள்ளப்பட்டுள்ளது.
634 தொகுதிகளின் வெற்றி நிலவரம்:-
கன்சர்வேட்டிவ் கட்சி – 310
தொழிலாளர் கட்சி – 258
ஸ்காட்லாந்து தேசியவாத கட்சி – 34
லிபரல் ஜனநாயக கட்சி – 12
ஜனநாயக ஒற்றுமைவாத கட்சி – 10
மற்றவை – 11