2 யூனிட் மணல் விலை ரூ.1,050: கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை

 

கூடுதல் விலைக்கு மணல் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எச்சரித்தார்.
புதுக்கோட்டையில் அரசு மருத்துவ கல்லூரியை திறந்து வைத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
அப்போது அவர் இதுபற்றி கூறியதாவது:–
தமிழ்நாட்டில் பொதுமக்களுக்கு கட்டுமான பணிகளுக்கு தடையின்றி எளிதாக மணல் கிடைக்கும் வகையில் தமிழக அரசால் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.
தற்போது செயல்பட்டு வரும் 28 மணல் குவாரிகளிலிருந்து தினசரி சுமார் 5000 லோடு மணல் பொதுப்பணித் துறை மூலம் பொதுமக்களுக்கு விநியோக்கப்பட்டு வருகிறது. இன்னும் ஒரு சில நாட்களில் கூடுதல் மணல் குவாரிகளை திறந்து பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி மணல் விநியோக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மணல் குவாரியில் இரண்டு யூனிட் மணல் ரூ.1050 – என்ற விலைக்கு விற்கப்படுகிறது.
எனவே, யாரேனும் கூடுதல் விலை வைத்து பொதுமக்களுக்கு மணல் விற்றால் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *