பயங்கரவாதிகளை பாதுகாக்க இந்திய படைகளை தாக்கிய பாக்., ராணுவம்

காஷ்மீரின் நவ்கம் பகுதியில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக வந்த தகவலின் பேரில் இந்திய ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பயங்கரவாதிகளுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
பயங்கரவாதிகளை தேடுதல் பணியின் போது இந்திய கட்டுப்பாட்டு நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியது. தேடுதல் வேட்டையுடன் பாக்., படைகளுக்கும் ராணுவத்தினர் பதிலடி கொடுத்து வந்தனர். இதற்கிடையில் மேலும் பல பயங்கரவாதிகள் அப்பகுதியில் பதுங்கி இருப்பதால், தேடுதல் வேட்டையை இந்திய ராணுவம் தீவிரப்படுத்தி உள்ளது.
இப்பகுதியில் பதுங்கி இருக்கும் பயங்கரவாதிகளை பாதுகாப்பதற்காகவும், அவர்களை இந்திய ராணுவம் நெருங்காமல் இருப்பதற்காகவுமே இந்திய கட்டுப்பாட்டு நிலைகளை குறிவைத்து பாக்., படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *