தருமபுரியில் மக்கள் குறைகேட்பு கூட்டம்

தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில், மக்கள் குறைதீர்க்கும் கூட்டம், கலெக்டர் (பொ) அ.சங்கர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், மொத்தம் 313 மனுக்களை பெற்று கொண்டு, சம்மந்தப்பட்ட துறை அலுவலரிடம் வழங்கிய கலெக்டர், உடனடி தீர்வு காண வேண்டுமென அறிவுறுத்தினார்.

முன்னதாக, 1 பயனாளிக்கு விதவை தொகை பெறுவதற்கான ஆணை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 1 பயனாளிக்கு ரூ.20 ஆயிரம் மதிப்பிலான சிறப்பு சக்கர நாற்காலி, 2 பேருக்கு ரூ.8 ஆயிரம் மதிப்பிலான தையல் இயந்திரங்கள், 1 பயனாளிக்கு ரூ.6 ஆயிரம் மதிப்பிலான செயற்கை கால் என, மொத்தம் 4 பேருக்கு, ரூ.34 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை, கலெக்டர் (பொ) அ.சங்கர் வழங்கினார்.

கூட்டத்தில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் அமீர்பாஷா, மாவட்ட வழங்கல் அலுவலர் மகாலட்சுமி, தனி துணை கலெக்டர் (கலால்) மல்லிகா, கலெக்டர் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) சித்ரா, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குநர் மகேஸ்வரி, முன்னோடி வங்கி மேலாளர் கண்ணன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மகிழ்நன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *