மதுரையில் மோட்டார் பொருத்திய தையல் எந்திரங்கள்: பயனாளிகளுக்கு கலெக்டர் வீரராகவராவ் வழங்கினார்

மக்கள் குறை தீர்க்கும் நாளில் மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரங்களை மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் வழங்கினார்.
மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டராங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 372 மனுக்கள் பெறப்பட்டு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் தலா 3 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்பிலான இலவச மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரங்கள் 2 பயனாளிகளுக்கும் மதுரை வடக்கு வட்டம் சார்பில் முதியோர் உதவித் தொகை பெறுவதற்கான ஆணைகளை 3 பயனாளிகளுக்கு வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரெ.குணாளன், தனித்துணை கலெக்டர் சாந்தா, மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகன் உள்ளிட்ட அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *