அனுஷ்கா – ரம்யாகிருஷ்ணன் மோதல்

பாகுபலி' இரு பாகங்களிலும் ஒன்றாக நடித்த நடிகைகள் அனுஷ்கா மற்றும் ரம்யா கிருஷ்ணன் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.பாகுபலி’ படத்தில் அனுஷ்காவும் – ரம்யா கிருஷ்ணனும் கடுமையாக மோதிக் கொண்டது பழையகதை. மீண்டும் கடுமையாக மோதிக்கொண்டது புதுக்கதை. இப்போது இவர்கள் மோதலில் ஈடுபட்டது நாகார்ஜுனா யாருக்குச் சொந்தம் என்பதற்காக….
முதல் மனைவி தான் இருக்க, புதிதாக வந்த அனுஷ்காவைப் பார்த்ததும் புலி போல் பாய்ந்தார் ரம்யாகிருஷ்ணன். “உன்னைப் போல் நான் எத்தனை பேரைப் பார்த்திருக்கிறேன். என்கிட்டையே பூச்சாண்டி காட்டுறியா?” என்று அனுஷ்காவும் கூறினார். இவர்களின் இந்த மோதல் உச்சம் பெற்றது ஓம்கார் பிலிம் சின் ‘சோக்காலி மைனர்’ படத்திற்காக.
நாளை மறுநாள் திரைக்கு வரும் இந்த படத்தில் நாகார்ஜுனா, ரம்யா கிருஷ்ணன், அனுஷ்கா ஆகியோருடன் நாசர், லாவண்யா திரிபாதி, சம்பத் ஆகியோரும் நடித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *