மாணவர் தூக்குபோட்டு தற்கொலை
கோவை அருகே காதல் பிரச்சனையால் கல்லூரி மாணவர் தூக்குபோட்டு தற்கொலை
கவுண்டம்பாளையம்:
கோவை கணுவாய் காமராஜர் நகரை சேர்ந்தவர் முருகேசன். இவரது 2-வது மகன் ஜெயசூர்யா (வயது 19). இவர் தனியார் கல்லூரியில் பி.காம். சி.ஏ., படித்து வந்தார். ஜெயசூர்யாவும் ஒரு மாணவியும் காதலித்து வந்ததாக தெரிகிறது. காதலில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக கடந்த ஒரு வாரமாக ஜெயசூர்யா விரக்தியில் இருந்தார்.
இந்நிலையில் வீட்டில் தனியே இருந்த ஜெயசூர்யா தூக்குபோட்டு கொண்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது ஜெயசூர்யா தூக்கில் உயிருக்கு போராடினார். அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ஜெயசூர்யா பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தடாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.