5 ஊர்களில் வெயில் சதம் : வானிலை ஆய்வு மையம்

5 ஊர்களில் வெயில் சதம் : வானிலை ஆய்வு மையம்

சென்னை : தமிழகத்தில் திருத்தணி உட்பட 5 ஊர்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் மேல் வெயில் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்திலேயே அதிக அளவாக திருத்தணியில் 105 டிகிரி பாரன்ஹீட் வெயில் சுட்டெரித்தது. மதுரை, சேலம், நாமக்கல், தர்மபுரியில் 101 டிகிரி பாரன்ஹீட் வெயில் காய்ந்தது. நெல்லை, திருச்சி, வேலூரில் 99 டிகிரியும், சென்னையில் 96 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *