5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு ”பள்ளிகளிலேயே தேர்வு நடைபெறும்” – அமைச்சர் செங்கோட்டையன்

சென்னை ஜன-21

 

5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு ”பள்ளிகளிலேயே தேர்வு நடைபெறும்” – அமைச்சர் செங்கோட்டையன் தெவிவித்துள்ளார்…

இந்தியாவின் பட்டய கணக்காளர்கள் நிறுவனத்தின் தென்னிந்திய பிராந்திய கவுன்சில் சார்பில் 7 வது ஆண்டு கருத்தரங்கம் நுங்கம்பாக்கத்திலுள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது…

இந்த நிகழ்வில் சிறப்பு விருந்திரைக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கௌண்டு குத்துவிளக்கேற்றி துவங்கி வைத்தார்…

நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்…

தமிழகத்தில் 5, 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வை தங்களது பள்ளியிலேயே மாணவர்கள் எழுதலாம். 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்கள் அந்தந்த பள்ளிகளிலேயே பொதுத்தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்படும். குறைவான மாணவர்கள் இருந்தாலும் பயிலும் பள்ளியிலேயே எழுத நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்,

மாணவர்கள் பயிலும் பள்ளியிலேயே பொதுத்தேர்வு எழுதும் வகையில் இன்று மாலைக்குள் ஆணை பிறப்பிக்கப்படும் என கூறிய அவர்..

அரசு பள்ளி மாணவர்களுக்கு பட்டய கணக்காளர் பயிற்சியினை அளிக்கும் நோக்சுத் தோடு அவர்களிடம் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது என்றார்…

பேட்டி: பள்ளி கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *