பாபா ஊனமுற்றோர் குடியிருப்போர் பொது நல அறக்கட்டளையின் சார்பில் ஊனமுற்றோர்களுக்கு நல திட்ட உதவிகள் வழங்கும் விழா
பாபா ஊனமுற்றோர் குடியிருப்போர் பொது நல அறக்கட்டளையின் சார்பில் ஊனமுற்றோர்களுக்கு நல திட்ட உதவிகள் வழங்கும் விழா
சென்னை: சென்னை போரூரை அடுத்த மதனந்தபுரம் மாதாநகர் மெயின் ரோட்டியில் அமைந்துள்ள ஸ்ரீஅஞ்சனை மஹாலில் ஊனமுற்றோருக்கு பாபா ஊனமுற்றோர் குடியிருப்போர் பொது நல அறக்கட்டளை யின் சார்பில் ஊனமுற்றோர்களுக்கு நல திட்ட உதவிகள் வழங்கும் விழா நடை பெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பழனி கலந்து கொண்டு மருத்துவமுகாம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் குன்றத்தூர் ஒன்றிய கவுன்சிலர் எஸ்.எம்.சுந்தர்ராஜன் கலந்து கொண்டு அன்னதானத் திட்டத்தை துவக்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பயனாளிகள் சட்டமன்ற உறுப்பினரிடம் பல்வேறு கோரிக்கை மனுக்களை கொடுத்தனர். அதைப் பெற்றுக் கொண்ட சட்டமன்ற உறுப்பினர் கே. பழனி உரிய நடவடிக்கை எடுப்பதாக பயனாளிகளிடம் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் அறக்கட்டளை தலைமை நிர்வாகிகள் எல்.சம்பத்குமார், என்.யுவராஜ், எஸ்.முருகன், இ.பாலசுந்தரம், மு.சேகர், எஸ்.ஸ்ரீநிவாசன், எம்.அருள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.